May 25, 2025

kamal hassan life lesson gopinath யிடம் கூறியது என்ன?


Kamal Hassan life Lesson gopinath

மல்ஹாசன் (kamal hassan)தமிழ் சினிமாவின் மிக முக்கியமான கலைஞர். கோபிநாத் அவரைப் பேட்டி எடுத்திருக்காருன்னா அது ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும். Image Credit 

அந்த உரையாடலின் முக்கியமான பகுதிகளைப் பற்றி தெரிஞ்சிக்கலாமா?


எதிர்ப்பார்ப்பு இல்லாமல் 

போர், கோவிட் போன்ற எதிர்பாராத விஷயங்கள் பற்றி கமல்,இது போன்ற சூழ்நிலைகளை நாம் எப்படி கடந்து செல்வது, இதற்கு எப்படி குரல் கொடுக்க வேண்டும் போன்ற கருத்துக்களையும் அவர் கூறியுள்ளார்.


கமல் ஹாசன் கூறியது என்ன?


"கூகுளிடம் கேட்பதற்கு முன் உங்கள் மனசிடம் கேட்டு உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்" என்பது மிக முக்கியமான கருத்து. 

  • நமக்கு என்ன தேவை, எதை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில் தெளிவு வேண்டும். 
  • தேவையில்லாத விஷயங்களை மனதில் இருந்து நீக்கிவிட்டு, தேவையான தகவல்களை மட்டும் கூகுளில் தேட வேண்டும்.

அரசியலுக்கு வந்தது வலது இடது மூளையின் செயல்பாட்டினால் மட்டுமே. 

மனதில் இருந்து நான் வந்ததாக நினைக்கவில்லை என்று கமல் கூறியிருக்கிறார்.


Thug லைப் 


Thug life  படத்தில் கமல் இளமையாக நடித்தது தொழில்நுட்பத்தின் உதவியால் உருவானது என்று கமல் சொல்லி தான் தெரிந்தது.

அது நிஜமாகவே கமல் (Kamal) நடித்தது போல் இருந்தது என்று கோபிநாத் வியந்து பேசியிருக்கிறார்.

தனக்குப் பிடித்த சினிமாவை மக்களுக்குக் கொடுப்பதும், மக்கள் அதை ரசிப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது.

இது அவரது ரசிகர்களுக்கு சினிமா மீது இருக்கும் ஆர்வத்தையும், ரசனையையும் காட்டுகிறது.

ஒரே விஷயத்தை திரும்பத் திரும்பச் செய்தால் போர் அடிக்கும். ஆனால், பெர்ஃபெக்ஷனை நோக்கிப் போகும்போதுதான் போர் அடிக்கும் என்று கமல் கூறியிருக்கிறார். 


kamal hassan Perfection


ஒருமுறை எழுதிய புத்தகத்தை திருத்தி எழுதாமல் அதை மேம்படுத்தி எழுத வேண்டும். திருத்தி எழுதுவதை விட, மேம்படுத்தி எழுதுவது படைப்பாற்றலை ஊக்குவிக்கும்.

பெர்ஃபெக்ஷன் என்பது எதுவுமே இல்லை. ஒரு புக்கை எழுதி முடித்த பிறகு அதைத் திருத்தி எழுதுவது ஒரு திருட்டு என்று கமல் கூறியிருக்கிறார்.

  • ஆரோக்கியம்: யோகாவிற்கும் பரதநாட்டியத்திற்கும் ஒரு தொடர்பு இருப்பதாக கமல் கூறியிருக்கிறார். 
  • குழந்தை பருவத்தில் நாம் கைகளையும் கால்களையும் ஊன்றி நடந்திருப்போம். 
  • இப்போதும் அதே மாதிரி செய்தால் உடம்பிற்கு நல்ல உடற்பயிற்சி செய்யும் அளவிற்கு இருக்கும். 
  • ஆரம்பத்தில் நாம் எப்படி இருந்தோமோ அதே மாதிரி இளமை பருவத்திலும் முதுமை பருவத்திலும் அதைத் தொடர்ந்து கடைப்பிடித்தால் அதுவும் ஒரு யோகாவாக மாறும்.

சகலகலா வல்லவன் 


சகலகலா வல்லவன் என்ற படம் கமர்ஷியல் ரீதியாக வெற்றி பெற்றது என்று கமல் கூறியிருக்கிறார். 

ஆனால், கமர்ஷியலாக நடித்ததாக கூறினால் பல தயாரிப்பாளர்களும் வருத்தப்படுவார்கள் என்பதால், யாரையும் குறிப்பிட விரும்பவில்லை என்று கமல் கூறியிருக்கிறார். 

கமர்ஷியல் மற்றும் கலை படங்கள் இரண்டிலும் நடித்ததாக கமல் ஒப்புக்கொண்டிருக்கிறார். 

பணக்காரன் 


நமக்கு போதுமான அளவு பணம் இருந்தால் போதும். மிச்ச பணத்தை நாம் எங்கிருந்து வந்தோமோ அதில் முதலீடு செய்வது நல்லது என்று கமல் கூறியிருக்கிறார். இது மிகவும் நல்ல கருத்து. 

இதனால் பணம் ஒரு இடத்தில் தேங்காமல், பலருக்கும் பயன்படும்.


கமலுக்குப் பின் வரும் இளம் தலைமுறையினர் 


கலையை வேறொரு உலகத்திற்கு எடுத்துச் செல்வார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை. 

ஆனால், அவர்களுக்கு நாம் வழிகாட்ட வேண்டும். எந்த வழியில் பயணித்தால் எளிதாக அந்த இடத்தை அடையலாம் என்பதை சொல்லிக் கொடுக்க வேண்டும்.

இதை கமல் மிக உணர்ச்சிவசமாகவும் வெளிப்படைத்தன்மையாகவும் பேசியிருக்கிறார்.

மலையாள சினிமாவில் கலைக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் தமிழ் சினிமாவில் இல்லையே என்ற கேள்விக்கு, ஆமாம்.

 அந்த மாதிரியான கலை சம்பந்தமான படைப்புகள் வருவது சுலபமான காரியம்தான். 

அதற்காகத்தான் என்னைப் மாதிரியான ஆட்களை மக்கள் இங்கே அனுப்பி வைக்கிறார்கள் என்பதை கூறுகிறார்.

இயக்குனர் ஸ்டான்லி குப்ரிக் மாதிரியான இயக்குனர்கள் அறிவியல் கலை மற்றும் இந்த மாதிரியான படைப்புகளை மிக யதார்த்தமாக எடுத்தார்கள் என்று கமல் கூறியிருக்கிறார்.

முடிவு எடுப்பது எப்படி 


பதட்டமில்லாமல் முடிவெடுப்பது எப்படி என்ற கேள்விக்கு, பதட்டப்பட்டுத்தான் அந்த முடிவையே எடுக்கிறேன். 

சாகாவரத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்றால் அது வாழ்க்கையின் ஒரு பகுதி, நிச்சயம் அது நடந்தே தீரும். இது மிகவும் யதார்த்தமான உண்மை.

சிங்கத்திற்கும் மானுக்கும் உள்ள வித்தியாசம் மான் எப்போதும் பதட்டத்துடனேயே இருக்கும், சிங்கம் தனக்கு இறை கிடைத்தால் போதும் என்ற மனநிலையில் இருக்கும். 

சிங்கத்திற்கு வேலி அமைப்பார்கள் ஆனால் மானுக்கு வேலி அமைக்க மாட்டார்கள். மான் வெகு தூரத்தில் புல்லைக் கண்டால் அதை எப்படி மேய வேண்டும் என்று துள்ளிக் குதித்து ஓடும். 

தமிழ் புலமைக்கு காரணம் 


கமல்ஹாசனின் தமிழ் புலமைக்கு காரணம் சிவாஜி, கலைஞர், கண்ணதாசன் போன்ற பலரை அவர் சுட்டிக்காட்டுகிறார். 

இந்த நபர்களால்தான் தான் இந்த அளவிற்கு தமிழ் உச்சரிப்பில் ஆழ்ந்து செயல்படுகிறேன்.

சிவாஜி கணேசனின் தமிழ் உச்சரிப்பு, கலைஞரின் தமிழ் வசனம், கண்ணதாசனின் கவிதை இந்த மூன்றையும் வைத்துதான் கமல் இந்த அளவிற்கு தமிழ் உச்சரிப்பில் சிறந்து விளங்குகிறார் என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள்.

 அந்த அளவிற்கு கமல்ஹாசனின் தமிழ் உச்சரிப்பும் அவருடைய வார்த்தை பிரயோகமும் சிறப்பாக உள்ளது.

 "என்னை விஞ்சுவதில் இருக்க வேண்டும் ஆர்வம், என்னை வீழ்த்துவதில் இருக்கக்கூடாது" இந்த மாதிரியான வார்த்தைகளை கமல்ஹாசனால் மட்டும்தான் பேச முடியும். இது அவரது தன்னம்பிக்கையையும், விடாமுயற்சியையும் காட்டுகிறது.


விஸ்வரூபம் படத்தில் கமல்ஹாசன் எழுதியிருக்கும் "போரில் போகும் யார் இறந்தாலும் ஒரு தாய் அழுவாள்" என்ற வார்த்தை மிகவும் வலிமையானது. 

போரின் கொடுமையை உணர்த்தும் இந்த வார்த்தை பலரையும் பாதித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஊலிக்கூத்தை அனுமதிக்கவே முடியாது" என்று கமல் கூறியிருக்கிறார். உதாரணமாக, இப்போது இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் நடந்திருக்கும் போரில் எத்தனை குழந்தைகள் தாய்மார்கள் இறந்தார்கள்.


Ai பற்றி கமல் சொன்னது 


வருகிற விஷயங்கள் வரத்தான் செய்யும் என்பதுதான் கமலின் நிலைப்பாடு. 

மாற்றங்களை ஏற்றுக்கொள்வதுதான் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று கமல் நம்புகிறார்.

காடுகள் வளர்வதில் குருவிகள் காக்கைகள் விதைகள் போடுவதால் தான் இந்த அளவிற்கு காடு மலைகள் எல்லாம் வந்தது. இதற்கு இதுதான் இயற்கை விவசாயம். 

அதேபோலத்தான் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ட்டும். உதாரணமாக பிரிண்டர் வேண்டாம்,மாட்டு வண்டி வேண்டாம், ட்ரெயின் வேண்டாம், என்றெல்லாம் சொல்ல முடியாது.

Gemini Ai பற்றி தெரிந்து கொள்ள Click செய்யவும் 

கமர்சியல் உலகம் 


 குழந்தையிலிருந்து நாம் கற்றுக்கொண்டது எழுந்து நட (மெயின்டெயின் யுவர் பேலன்ஸ் )என்ற வாசகம்தான். அவருடைய கட்சிக்கும் (மையம் ) என்றுதான் பெயர் வைத்திருந்தார்.

 பேலன்ஸ் பண்ணிதான் வாழ்க்கையை நாம் கொண்டுபோக வேண்டும் என்பது ஒரு நிதர்சனமான உண்மை.

மை Point of View 

  • நமக்காக நாம் வைத்திருக்கும் நேரத்தை யாரோ எடுத்துக்கொள்கிறார்கள் என்பது முற்றிலும் தவறானது. 
  • நாம் தான் அதற்கு நேரத்தை கொடுக்கிறோம். 
  • உதாரணமாக மொபைல் போன் பார்ப்பதற்கும் சினிமா பார்ப்பதற்கும் தான் நம்முடைய நேரத்தை அதிகமாக செலவிடுகிறோம். 
  • சிறு வயதிலிருந்தே நாம் இது மாதிரியான விஷயங்களைத் தவிர்த்தால் அறிவார்ந்த விஷயங்களை நம்மால் எளிதில் படிக்க முடியும்.

அதிகமான அறிவுகளை வளர்க்க அதிகமான புத்தகங்களையும், நல்ல அறிவார்ந்த மனிதர்களுடனும் நம்முடைய பழக்க வழக்கங்களை கடைபிடித்தால் நாமும் வாழ்க்கையில் என்ன நினைக்கிறோமோ அதை நோக்கி நம்மால் பயணிக்க முடியும் என்பதை இந்த வீடியோ வாயிலாக நான் கற்றுக்கொண்டது. அதுவும் கமல்ஹாசனிடம்.

Gemini Ai என்றால் என்ன? Tamil blog Spot

Gemini Ai என்றால் என்ன? Tamil blog Spot


Gemini Ai logo

Image credit Google 


Gemini Ai செயலி கூகுள் உருவாக்கிய ஒரு பெரிய மொழி மாதிரி.இது ஒரு வகையான செயற்கை நுண்ணறிவு. 


தகவல்களைத் தேடவும், மொழிகளை மொழிபெயர்க்கவும், வெவ்வேறு வகையான ஆக்கப்பூர்வமான உள்ளடக்கத்தை எழுதவும் மற்றும் உங்கள் கேள்விகளுக்குத் தகவல் தரும் வகையில் பதிலளிக்கவும் முடியும்.


  • gemini ai செயலி மூலம் தமிழில் கவிதை, சிறுகதை மற்றும் கட்டுரை எழுத முடியும் (tamil writing).
  • ஆங்கிலத்தில் உள்ள தகவல் களை தமிழில் மொழி பெயர்க்க முடியும்(tamil translation).
  • தமிழில் தெரியாத சந்தேகங்கள் இருப்பின் கேட்டு தெரிந்து கொள்ளலாம்(learning tamil)


பேசினால் தாமாக எழுதும் Ai செயலி 



Gemini Ai செயலியில் நீங்கள் பேசுவதை தானாக டைப் செய்யும் வசதி உள்ளது. இதை பயன்படுத்தி நீங்கள் எளிதாக உரைகளை உருவாக்கலாம்.


பேசும்போதே தானாக எழுத்துக்களாக மாற்றும் பல செயலிகள் (Gemini Ai )உள்ளன. 


அவற்றை பயன்படுத்தி, நீங்கள் என்ன சொல்ல நினைக்கிறீர்களோ அதை பேசி, தானாக உருவாகும் எழுத்து வடிவத்தை எளிதாக காப்பி செய்து, உங்களுக்கு தேவையான இடங்களில் பயன்படுத்தலாம்.



Future typewriter 


எதிர்காலத்தில், நாம் பேசுவதை தானாக எழுத்துக்களாக மாற்றும் தொழில்நுட்பம் இன்னும் மேம்படும். 


இதனால், டைப்பிங் செய்வதற்கான தேவை குறையும். மேலும், இந்த தொழில்நுட்பம் கல்வி, வேலை மற்றும் அன்றாட வாழ்க்கை போன்ற பல்வேறு துறைகளில் பயன்படும்.

  • Automatic Type
  • Any language
  • Time save 

Gemini Ai App


ஜெமினி போன்ற தொழில்நுட்பங்கள் எதிர்காலத்தில் டைப்பிங் துறையில் பெரிய மாற்றங்களை கொண்டு வரும் என்பதில் சந்தேகம் இல்லை. 


இந்த தொழில்நுட்பம் வளர்வதால், மக்கள் டைப் செய்து வேலை செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. 


(Gemini Ai) ஜெமினியை பயன்படுத்தி, பேசும்போதே வார்த்தைகளை எழுத்துக்களாக மாற்றி, வேலையை எளிதாகவும் விரைவாகவும் முடிக்க முடியும்.



World Language 


ஜெமினிக்கு (Gemini Ai App) அபரிமிதமான வல்லமை உள்ளது. 


பேசும்போதே எழுத்துக்களாக மாற்றும் திறன், பல மொழிகளை புரிந்து கொள்ளும் ஆற்றல் மற்றும் பல்வேறு தலைப்புகளில் தகவல்களை வழங்கும் வசதி ஆகியவை ஜெமினியின் சில முக்கிய பலங்கள்.



Tamilnadu People should use gemini Ai app


தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் டைப்பிங் தெரிந்தவர்களுக்கு நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளன. 


ஆனால், ஜெமினி போன்ற தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருவதால், எதிர்காலத்தில் டைப்பிங் வேலைகளின் தேவை குறைய வாய்ப்புள்ளது. 


ஜெமினி, நாம் பேசுவதை தானாக எழுத்துக்களாக மாற்றி, பிழைகள் இல்லாமல் வேலையை முடிக்க உதவும். 


எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, இந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது நல்லது.


  1. நேரத்தை மிச்சப்படுத்தும் 
  2. டைப் படிக்க தேவைப்படும் பணம் செலவு குறையும் 
  3. பயம் இருக்காது 
  4. தவறு திருத்த படும் 
  5. உடல் உழைப்பு குறையும் 

Tamilnadu Government Conider Gemini Ai App


ஜெமினி போன்ற தொழில்நுட்பங்கள் எதிர்காலத்தில் டைப்பிங் துறையில் பெரிய மாற்றங்களை கொண்டு வரும். 


அரசாங்க அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் என அனைத்து துறைகளிலும் எதிரொலிக்கும். 


எனவே, இந்த தொழில்நுட்பங்களை பற்றி மக்கள் அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். 


தமிழ்நாடு அரசும் இதை கருத்தில் கொண்டு, ஜெமினி போன்ற செயலிகளை பயன்படுத்தி, அரசு அலுவலகங்களில் ஏற்படும் நேர விரயத்தை குறைத்து, பணியாளர்களின் திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கலாம்.


தமிழ் மக்கள் பார்வைக்கு 


ஜெமினி போன்ற தொழில்நுட்பங்கள் எதிர்காலத்தில் டைப்பிங் துறையில் பெரிய மாற்றங்களை கொண்டு வரும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 


எனவே, டைப்பிங் சென்டர்களில் படிப்பதற்கான தேவையை விட, ஜெமினி போன்ற செயலிகளை பயன்படுத்துவது எதிர்காலத்திற்கு சிறந்தது.


எதிகாலம் Ai கையில் 


தங்கள் குழந்தைகளுக்கு தேவையான தொழில்நுட்ப அறிவை வழங்குவதன் மூலம், எதிர்கால வேலை வாய்ப்புகளுக்கு அவர்களை தயார்படுத்தலாம்.



Gemini Ai செயல் படும் விதம் 



Gemini Ai speech to text



1) Go to playstore or iOS search Gemini AI 

2) CLICK TO Download 

3) Allow microphone 

4) Select Speech option 

5) You can talk to Gemini Ai 


ப்ளே ஸ்டோர் அல்லது iOS-ல் பதிவிறக்கம் செய்வது, மைக்ரோஃபோன் அனுமதிகளை வழங்குவது மற்றும் தமிழில் பேசுவது தானாகவே தட்டச்சு செய்வது போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.


சவால்கள் (accuracy)


ஜெமினி AI, வட்டார மொழிகளில் பேசினாலும் அதைப் புரிந்துகொண்டு, எளிமையான மற்றும் தெளிவான தமிழில் வழங்கும் திறனைக் கொண்டுள்ளது. 


தொழில்நுட்பம் மற்றும் மனிதர்களுக்கு இடையேயான தொடர்பை மேம்படுத்துகிறது.



Ai செயலி 


ஜெமினி AI-யை அனைவரும் பயன்படுத்தினால், பல புதிய விஷயங்களை எளிதில் கற்றுக்கொள்ளலாம். 

நமக்குத் தெரியாத தகவல்களைக் கூட கேட்டுத் தெரிந்துகொள்ள உதவும் ஒரு சிறந்த கருவியாகும். எனவே, ஜெமினி AI-யை பதிவிறக்கம் செய்து பயன் பெறலாம்.


கல்வியில் Ai 

  • ஜெமினி AI மாணவர்களுக்கு ஒரு சிறந்த கற்றல் கருவியாக இருக்கும். 
  • கணிதம், அறிவியல், வரலாறு மற்றும் மொழிப் பாடங்கள் மட்டுமின்றி, எதிர்காலத்திற்கு தேவையான பல தகவல்களையும் ஜெமினி AI மூலம் எளிதாகப் பெறலாம். 
  • ஆசிரியர்கள் கற்பிக்கும் பாடங்களையும் ஜெமினி AI மூலம் மாணவர்கள் இன்னும் ஆழமாக புரிந்து கொள்ள முடியும்.
  • ஜெமினி AI வகுப்பறையில் கணிதப் பாடத்தில் உள்ள பிழைகளைத் திருத்தவும், ஆங்கிலம் தெரியாதவர்களுக்கு தமிழ் மொழியைப் பயன்படுத்தி ஆங்கிலம் கற்றுக்கொள்ளவும் உதவும்.
  • ஜெமினி AI மூலம் அறிவியல் மற்றும் சமூகத்திற்கு தேவையான அனைத்து விடயங்களையும் ஒருவரிடம் எளிதாகக் கற்றுக் கொள்ள முடியும்.
  • ஜெமினி AI மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள கருவி. இது ஒரு ஆல் இன் ஒன் செயலி போல செயல்படுகிறது. 
  • Ai செயலி மூலம் மாணவர்கள் தேவையான தகவல்களை ஒரே இடத்தில் தெரிந்து கொள்ளலாம். 
  • இதனால் நேரம் மிச்சமாகும், மேலும் யாரையும் சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

Gemini Ai Real Time Translator 

  • ஜெமினி AI-ஐ பயன்படுத்தி, உங்களுக்குத் தெரியாத மொழிகளில் பேசுபவர்களுடனும் நீங்கள் உரையாடலாம். 
  • அவர்கள் ஆங்கிலத்தில் பேசினால், ஜெமினி AI அதை உங்களுக்குத் தமிழில் மொழிபெயர்த்து கொடுக்கும். 
  • இது மொழித்தடைகளைத் தாண்டி, மக்களுடன் எளிதாக உரையாட உதவும் ஒரு சிறந்த வசதி.


Videocredit Google YouTube channel 


தினசரி வாழ்வில் Ai 


  • ஜெமினி AI நமது அன்றாட வாழ்வில் பல மாற்றங்களை கொண்டு வர தயாராக உள்ளது. 
  • தெரியாத புத்தகங்களை பற்றி தெரிந்து கொள்வது, சந்தையில் பொருட்களை பற்றி அறிவது, புதிய செயலிகளை பயன்படுத்துவது, இணையத்தில் நாம் படிக்க விரும்பும் தகவல்களை பெறுவது என பல விதங்களில் ஜெமினி AI நமக்கு உதவும். 
  • இது நமது வாழ்க்கையை எளிதாக்கும் ஒரு சிறந்த கருவி.

சமீபத்திய தொழில் நுட்ப செய்திகள் (Latest Tech News)

  1. ஜெமினி AI-யை பயன்படுத்தி, புதிய தொழில்நுட்பங்கள், மொபைல் போன்கள் மற்றும் இணையத்தில் நடக்கும் விஷயங்கள் என அனைத்தையும் ஒரே இடத்தில் தெரிந்து கொள்ளலாம். 
  2. கூகுள் நிறுவனம், உலகத்தில் உள்ள அனைத்து செய்தித்தாள்களையும் படித்து, மக்களுக்கு பயன்படும் வகையில் ஜெமினி AI-யை வடிவமைத்துள்ளது.

பங்குசந்தையில் Gemini Ai செயலி


பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கம் ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. 


  • பொருளாதாரச் செய்திகள், நிறுவனங்களின் செயல்பாடுகள், அரசியல் நிகழ்வுகள் மற்றும் முதலீட்டாளர்களின் மனநிலை ஆகியவை முக்கிய காரணிகளாகும். 
  • இந்த ஏற்ற இறக்கங்களைச் சமாளிக்க, நீண்ட கால முதலீட்டுத் திட்டத்தை வைத்திருப்பது, பல்வேறு துறைகளில்முதலீடு செய்வது மற்றும் உணர்ச்சிவசப்படாமல் இருப்பது அவசியம். 

சந்தையைப் பற்றிய சரியான புரிதலுடன் முதலீடு செய்வது நல்லது.



அரசியலில் Gemini ai செயலி 


திமுக, அதிமுக, பாஜக, பாமக மற்றும் விசிக,தா வெ க போன்ற கட்சிகள் தமிழக அரசியலில் முக்கிய பங்கு வகிக்கின்றன. சமீபத்திய நிகழ்வுகளைப் பொறுத்தவரை, பல்வேறு கட்சிகள் தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.


#geminiaiintamil #tamilblogspot #தொழில்நுட்பம் 

May 23, 2025

RBI Gold rules explain in tamil

RBI Gold Rules Explain in Tamil

Video credit Money Pechu 

Time Stamp:
00:00 - Intro
00:08 - Madurai event
01:32 - US Market
04:30 - GodFrey Phillips
05:17 - South Indian Bank
06:04 - IndusInd Bank
08:02 - IDFC First bank
09:04 - Gold - Rapid Fire questions


My Point of view 

அமெரிக்க டாலர் உலகளவில் அதிகளவில் பயன்படுத்தப்படுவதால், அமெரிக்கா பொருளாதார ரீதியாக வலுவாக உள்ளது. 

அமெரிக்காவின் பொருளாதார வலிமை மற்றும் அரசியல் செல்வாக்கு ஆகியவை டாலரின் இந்த நிலைக்கு முக்கிய காரணங்களாக உள்ளன.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்யும்போது, வரி விதிமுறைகள் மற்றும் பரிமாற்றக் கட்டணங்களை கவனமாக ஆராய்வது அவசியம். இது தொடர்பாக உங்களுக்கு வேறு ஏதேனும் கேள்விகள் இருந்தால் கேளுங்கள்.


Commentary 

  • சவுத் இந்தியன் வங்கி (South Indian bank)மற்றும் கர்நாடகா வங்கி (Karnataka bank) பங்குகள் தற்போது நல்ல நிலையில் உள்ளன. இருப்பினும், முதலீடு செய்வதற்கு முன் சந்தை நிலவரத்தை நன்கு ஆராய்ந்து, உங்கள் நிதி ஆலோசகருடன் கலந்தாலோசிப்பது நல்லது.
  • இண்டஸ்இண்ட் வங்கியில் (indusind bank) முன்பு சில பிரச்சனைகள் இருந்தன. ஆனால், தற்போது அந்தப் பிரச்சனைகள் பெரும்பாலும் சரி செய்யப்பட்டுவிட்டன. இதனால், இந்த வங்கியின் பங்குகள் தற்போது நல்ல நிலையில் உள்ளன.
  • வான்பெர்ட் பிங்கர்ஸ் நிறுவனம் ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் வங்கியில் (Idfc bank)முதலீடு செய்ய இருந்தது. ஆனால், உள்நாட்டு முதலீட்டாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த முதலீடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


RBI Gold draft rules explain in Tamil

தங்கத்தை அடமானம் வைப்பதற்கு அரசாங்கம் சில புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. 

  • தங்கத்தின் தூய்மையை உறுதி செய்வதற்காக, நகை வாங்கியதற்கான ரசீது மற்றும் பிற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். 
  • கடன் தொகையானது தங்கத்தின் மதிப்பில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் மட்டுமே வழங்கப்படும். 
  • இந்த விதிமுறைகள் தங்கத்தை அடமானம் வைப்பதில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக கொண்டுவரப்பட்டுள்ளன. 
  • 22 காரட் தங்க நகைகளை மட்டுமே அடமானம் வைக்க வேண்டும் என்ற விதிமுறை இல்லை. 
  • 22 காரட் தங்க நகைகளுக்கு அதிக மதிப்பு கிடைக்கும். 
  • நகையின் ரசீது மற்றும் பிற ஆவணங்களை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 
  • கோல்ட் ஈடிஎஃப் (Gold bees) டிஜிட்டல் கோல்ட் மற்றும் தங்கப் பத்திரங்கள் (gold bond) போன்றவற்றை அடமானம் வைக்க முடியாது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
  • அதிகபட்சமாக ஒரு கிலோ தங்க நகைகளை மட்டுமே அடமானம் வைக்க முடியும் என்ற விதிமுறையும் உள்ளது.
  • நகை கடனுக்கான பணத்தை கொடுத்த பிறகு முழு பணத்தையும் கொடுக்கவில்லை என்றால், ஏழு நாட்களுக்குள் 5000 ரூபாய் அரசாங்கம் உங்களுக்கு கொடுக்கும் என்ற தகவல் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.
  • தங்கம் உங்களுடையது தானா, அது எப்படி வந்தது, யாரிடமிருந்து வாங்கினீர்கள் போன்ற விவரங்களை அரசாங்கம் கேட்பதற்கான காரணம், சட்டவிரோதமான தங்கத்தை அடமானம் வைப்பதைத் தடுப்பது தான்.
  • தங்கத்தை வாங்கும் போது, குறிப்பாக பெற்றோர்களிடமிருந்து பெற்றிருந்தால், அதற்கான ஆவணங்களை முறையாகப் பராமரிப்பது மிகவும் முக்கியம். எதிர்காலத்தில் வருமான வரி தொடர்பான கேள்விகளுக்கு இது உதவியாக இருக்கும்.
Sources from Economic Times

Disclaimer: இந்த வீடியோ கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே. இதை நிதி ஆலோசனை என்று கருதக்கூடாது. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுக்கும் முன், எப்போதும் தகுதியான நிதி ஆலோசகரை அணுகவும்.

உங்கள் கருத்துக்கள் தெரிவித்தால் மேலும் இது மாதிரியான கட்டுரைகளை எழுத முடியும்.




May 22, 2025

Redirect error Google search console

 இது நான் இந்த வலை தளைத்தை மேம்படுத்தும் பொருட்டு ஒரு சில வற்றை செய்ய வேண்டும். இது எனக்கு இன்று ஒரு தகவல் தேவை பட்டது redirect error on Google search console.

இதனை நான் எவ்வாறு தீர்க்க வேண்டும் என்று YouTube வலை தளத்தில் தேடிய போது இந்த video பயன் உள்ளதாக இருந்தது.



September 17, 2022

How to create Instagram account in tamil


How to create Instagram account in tamil


இன்ஸ்டகிரம் ஆக்கவுண்ட் ஐ போன் நம்பர் மற்றும் இ-மெயில் ஐடி அல்லது பேஸ்புக் அக்கவுண்ட் வழியாக எளிமையாக நம்மால் உருவாக்க முடியும்.

All you need is a phone number and a Gmail account to start the Instagram app, You can start Also an Instagram account with a Facebook account.

Instagram App For Android And IPhone 

1) Download Instagram App If You Use Android(Google Play Store ) or iPhone (App Store)

2)Open App 

3) Signup email address or phone number or Login Facebook Account 

4) If u Select phone number (Which will require a a Conformation Code ) 

5) Just Write Code 

6) Now Your Instagram Account it's Active

7) Which Name You Want  Add Username

8)  Add Your profile photo, And use it.