கமல்ஹாசன் (kamal hassan)தமிழ் சினிமாவின் மிக முக்கியமான கலைஞர். கோபிநாத் அவரைப் பேட்டி எடுத்திருக்காருன்னா அது ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும். Image Credit
அந்த உரையாடலின் முக்கியமான பகுதிகளைப் பற்றி தெரிஞ்சிக்கலாமா?
எதிர்ப்பார்ப்பு இல்லாமல்
போர், கோவிட் போன்ற எதிர்பாராத விஷயங்கள் பற்றி கமல்,இது போன்ற சூழ்நிலைகளை நாம் எப்படி கடந்து செல்வது, இதற்கு எப்படி குரல் கொடுக்க வேண்டும் போன்ற கருத்துக்களையும் அவர் கூறியுள்ளார்.
கமல் ஹாசன் கூறியது என்ன?
"கூகுளிடம் கேட்பதற்கு முன் உங்கள் மனசிடம் கேட்டு உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்" என்பது மிக முக்கியமான கருத்து.
- நமக்கு என்ன தேவை, எதை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில் தெளிவு வேண்டும்.
- தேவையில்லாத விஷயங்களை மனதில் இருந்து நீக்கிவிட்டு, தேவையான தகவல்களை மட்டும் கூகுளில் தேட வேண்டும்.
அரசியலுக்கு வந்தது வலது இடது மூளையின் செயல்பாட்டினால் மட்டுமே.
மனதில் இருந்து நான் வந்ததாக நினைக்கவில்லை என்று கமல் கூறியிருக்கிறார்.
Thug லைப்
Thug life படத்தில் கமல் இளமையாக நடித்தது தொழில்நுட்பத்தின் உதவியால் உருவானது என்று கமல் சொல்லி தான் தெரிந்தது.
அது நிஜமாகவே கமல் (Kamal) நடித்தது போல் இருந்தது என்று கோபிநாத் வியந்து பேசியிருக்கிறார்.
தனக்குப் பிடித்த சினிமாவை மக்களுக்குக் கொடுப்பதும், மக்கள் அதை ரசிப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது.
இது அவரது ரசிகர்களுக்கு சினிமா மீது இருக்கும் ஆர்வத்தையும், ரசனையையும் காட்டுகிறது.
ஒரே விஷயத்தை திரும்பத் திரும்பச் செய்தால் போர் அடிக்கும். ஆனால், பெர்ஃபெக்ஷனை நோக்கிப் போகும்போதுதான் போர் அடிக்கும் என்று கமல் கூறியிருக்கிறார்.
kamal hassan Perfection
ஒருமுறை எழுதிய புத்தகத்தை திருத்தி எழுதாமல் அதை மேம்படுத்தி எழுத வேண்டும். திருத்தி எழுதுவதை விட, மேம்படுத்தி எழுதுவது படைப்பாற்றலை ஊக்குவிக்கும்.
பெர்ஃபெக்ஷன் என்பது எதுவுமே இல்லை. ஒரு புக்கை எழுதி முடித்த பிறகு அதைத் திருத்தி எழுதுவது ஒரு திருட்டு என்று கமல் கூறியிருக்கிறார்.
- ஆரோக்கியம்: யோகாவிற்கும் பரதநாட்டியத்திற்கும் ஒரு தொடர்பு இருப்பதாக கமல் கூறியிருக்கிறார்.
- குழந்தை பருவத்தில் நாம் கைகளையும் கால்களையும் ஊன்றி நடந்திருப்போம்.
- இப்போதும் அதே மாதிரி செய்தால் உடம்பிற்கு நல்ல உடற்பயிற்சி செய்யும் அளவிற்கு இருக்கும்.
- ஆரம்பத்தில் நாம் எப்படி இருந்தோமோ அதே மாதிரி இளமை பருவத்திலும் முதுமை பருவத்திலும் அதைத் தொடர்ந்து கடைப்பிடித்தால் அதுவும் ஒரு யோகாவாக மாறும்.
சகலகலா வல்லவன்
சகலகலா வல்லவன் என்ற படம் கமர்ஷியல் ரீதியாக வெற்றி பெற்றது என்று கமல் கூறியிருக்கிறார்.
ஆனால், கமர்ஷியலாக நடித்ததாக கூறினால் பல தயாரிப்பாளர்களும் வருத்தப்படுவார்கள் என்பதால், யாரையும் குறிப்பிட விரும்பவில்லை என்று கமல் கூறியிருக்கிறார்.
கமர்ஷியல் மற்றும் கலை படங்கள் இரண்டிலும் நடித்ததாக கமல் ஒப்புக்கொண்டிருக்கிறார்.
பணக்காரன்
நமக்கு போதுமான அளவு பணம் இருந்தால் போதும். மிச்ச பணத்தை நாம் எங்கிருந்து வந்தோமோ அதில் முதலீடு செய்வது நல்லது என்று கமல் கூறியிருக்கிறார். இது மிகவும் நல்ல கருத்து.
இதனால் பணம் ஒரு இடத்தில் தேங்காமல், பலருக்கும் பயன்படும்.
கமலுக்குப் பின் வரும் இளம் தலைமுறையினர்
கலையை வேறொரு உலகத்திற்கு எடுத்துச் செல்வார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
ஆனால், அவர்களுக்கு நாம் வழிகாட்ட வேண்டும். எந்த வழியில் பயணித்தால் எளிதாக அந்த இடத்தை அடையலாம் என்பதை சொல்லிக் கொடுக்க வேண்டும்.
இதை கமல் மிக உணர்ச்சிவசமாகவும் வெளிப்படைத்தன்மையாகவும் பேசியிருக்கிறார்.
மலையாள சினிமாவில் கலைக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் தமிழ் சினிமாவில் இல்லையே என்ற கேள்விக்கு, ஆமாம்.
அந்த மாதிரியான கலை சம்பந்தமான படைப்புகள் வருவது சுலபமான காரியம்தான்.
அதற்காகத்தான் என்னைப் மாதிரியான ஆட்களை மக்கள் இங்கே அனுப்பி வைக்கிறார்கள் என்பதை கூறுகிறார்.
இயக்குனர் ஸ்டான்லி குப்ரிக் மாதிரியான இயக்குனர்கள் அறிவியல் கலை மற்றும் இந்த மாதிரியான படைப்புகளை மிக யதார்த்தமாக எடுத்தார்கள் என்று கமல் கூறியிருக்கிறார்.
முடிவு எடுப்பது எப்படி
பதட்டமில்லாமல் முடிவெடுப்பது எப்படி என்ற கேள்விக்கு, பதட்டப்பட்டுத்தான் அந்த முடிவையே எடுக்கிறேன்.
சாகாவரத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்றால் அது வாழ்க்கையின் ஒரு பகுதி, நிச்சயம் அது நடந்தே தீரும். இது மிகவும் யதார்த்தமான உண்மை.
சிங்கத்திற்கும் மானுக்கும் உள்ள வித்தியாசம் மான் எப்போதும் பதட்டத்துடனேயே இருக்கும், சிங்கம் தனக்கு இறை கிடைத்தால் போதும் என்ற மனநிலையில் இருக்கும்.
சிங்கத்திற்கு வேலி அமைப்பார்கள் ஆனால் மானுக்கு வேலி அமைக்க மாட்டார்கள். மான் வெகு தூரத்தில் புல்லைக் கண்டால் அதை எப்படி மேய வேண்டும் என்று துள்ளிக் குதித்து ஓடும்.
தமிழ் புலமைக்கு காரணம்
கமல்ஹாசனின் தமிழ் புலமைக்கு காரணம் சிவாஜி, கலைஞர், கண்ணதாசன் போன்ற பலரை அவர் சுட்டிக்காட்டுகிறார்.
இந்த நபர்களால்தான் தான் இந்த அளவிற்கு தமிழ் உச்சரிப்பில் ஆழ்ந்து செயல்படுகிறேன்.
சிவாஜி கணேசனின் தமிழ் உச்சரிப்பு, கலைஞரின் தமிழ் வசனம், கண்ணதாசனின் கவிதை இந்த மூன்றையும் வைத்துதான் கமல் இந்த அளவிற்கு தமிழ் உச்சரிப்பில் சிறந்து விளங்குகிறார் என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள்.
அந்த அளவிற்கு கமல்ஹாசனின் தமிழ் உச்சரிப்பும் அவருடைய வார்த்தை பிரயோகமும் சிறப்பாக உள்ளது.
"என்னை விஞ்சுவதில் இருக்க வேண்டும் ஆர்வம், என்னை வீழ்த்துவதில் இருக்கக்கூடாது" இந்த மாதிரியான வார்த்தைகளை கமல்ஹாசனால் மட்டும்தான் பேச முடியும். இது அவரது தன்னம்பிக்கையையும், விடாமுயற்சியையும் காட்டுகிறது.
விஸ்வரூபம் படத்தில் கமல்ஹாசன் எழுதியிருக்கும் "போரில் போகும் யார் இறந்தாலும் ஒரு தாய் அழுவாள்" என்ற வார்த்தை மிகவும் வலிமையானது.
போரின் கொடுமையை உணர்த்தும் இந்த வார்த்தை பலரையும் பாதித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஊலிக்கூத்தை அனுமதிக்கவே முடியாது" என்று கமல் கூறியிருக்கிறார். உதாரணமாக, இப்போது இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் நடந்திருக்கும் போரில் எத்தனை குழந்தைகள் தாய்மார்கள் இறந்தார்கள்.
Ai பற்றி கமல் சொன்னது
வருகிற விஷயங்கள் வரத்தான் செய்யும் என்பதுதான் கமலின் நிலைப்பாடு.
மாற்றங்களை ஏற்றுக்கொள்வதுதான் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று கமல் நம்புகிறார்.
காடுகள் வளர்வதில் குருவிகள் காக்கைகள் விதைகள் போடுவதால் தான் இந்த அளவிற்கு காடு மலைகள் எல்லாம் வந்தது. இதற்கு இதுதான் இயற்கை விவசாயம்.
அதேபோலத்தான் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ட்டும். உதாரணமாக பிரிண்டர் வேண்டாம்,மாட்டு வண்டி வேண்டாம், ட்ரெயின் வேண்டாம், என்றெல்லாம் சொல்ல முடியாது.
Gemini Ai பற்றி தெரிந்து கொள்ள
Click செய்யவும்
கமர்சியல் உலகம்
குழந்தையிலிருந்து நாம் கற்றுக்கொண்டது எழுந்து நட (மெயின்டெயின் யுவர் பேலன்ஸ் )என்ற வாசகம்தான். அவருடைய கட்சிக்கும் (மையம் ) என்றுதான் பெயர் வைத்திருந்தார்.
பேலன்ஸ் பண்ணிதான் வாழ்க்கையை நாம் கொண்டுபோக வேண்டும் என்பது ஒரு நிதர்சனமான உண்மை.
மை Point of View
- நமக்காக நாம் வைத்திருக்கும் நேரத்தை யாரோ எடுத்துக்கொள்கிறார்கள் என்பது முற்றிலும் தவறானது.
- நாம் தான் அதற்கு நேரத்தை கொடுக்கிறோம்.
- உதாரணமாக மொபைல் போன் பார்ப்பதற்கும் சினிமா பார்ப்பதற்கும் தான் நம்முடைய நேரத்தை அதிகமாக செலவிடுகிறோம்.
- சிறு வயதிலிருந்தே நாம் இது மாதிரியான விஷயங்களைத் தவிர்த்தால் அறிவார்ந்த விஷயங்களை நம்மால் எளிதில் படிக்க முடியும்.
அதிகமான அறிவுகளை வளர்க்க அதிகமான புத்தகங்களையும், நல்ல அறிவார்ந்த மனிதர்களுடனும் நம்முடைய பழக்க வழக்கங்களை கடைபிடித்தால் நாமும் வாழ்க்கையில் என்ன நினைக்கிறோமோ அதை நோக்கி நம்மால் பயணிக்க முடியும் என்பதை இந்த வீடியோ வாயிலாக நான் கற்றுக்கொண்டது. அதுவும் கமல்ஹாசனிடம்.
2 comments:
அருமை
Thank you for comment
Post a Comment